பெல்வத்த சீனிதொழிற் சாலையில் வேலை செய்யும் அநேக மாநோருக்கு கிட்னி பாதிப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இதன் காரணமாக இதுவரையில் 30 மரணித்துள்ளதுடன் 25 பேருக்கும் அதிகமானவர்களுக்கு இந்த வியாதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமும் உலக கடல் ஓரக் காணிகள் கொள்ளைக்கு எதிரான சர்வதேச அமைப்பும் இணைந்து நடத்திய கள ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பெல்வத்த கொலனி மக்கள் தெரிவிக்கையில், இந்த கிராமத்தில் உள்ளவர்கள் தங்களது காணிகள் இருந்தும் அதற்கான எந்தவிதமான ஒப்புக்களும் இல்லாமல் இருக்கின்றனர். தங்களது பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பது, குடிநீர் வசதி கூட தேவையென்றாலும் பெல்வத்த சீனி தொழிற்சாலையின் அனுமதியினை பெ வேண்டும். இங்கு எது நடந்தாலும் எமக்கு இருப்பது இந்த தொழிற்சாலை நிர்வாகம் மட்டுமே. இவர்கள்தான் இன்று எம்மை அடிமைகளாக வைத்துள்ளர்கள். 1985 ம் ஆண்டில் இருந்து விவசாயம் மற்றும் கரும்பு நடுகையில் ஈடுபடுபவர்களே இந்த கொலனியில் வசித்து வருகின்றோம். ஆனால் எங்களுக்கு உள்ள சந்தேகம் இந்த நீரில் இருந்து இந்த வருத்தம் வந்துள்ளதா? அல்லது சீனி தொழிற்சாலையில் உள்ள இரசாயன கழிவுகளால் வந்துள்ளதா? என்று கேள்வி எழும்பியுள்ளது .
முன்னைய காலங்களில் எங்களுக்கு கிணறுகள் இருந்தது. அதில் நீரை பெற்றோம். தற்போது எங்களுக்கான குடிநீரை கூட சீனி தொழிற்சாலையே வழங்குகின்றது. இந்த நீர் கூட எங்கேயோ இருந்து எடுத்து வந்து எமக்கு தருகின்றனர். நாங்கள் வேறு வழியில்லாமல் இந்த நீரை அருந்துகின்றோம். அதனாலே இந்த வருடத்தில் பலரை இழந்துள்ளோம். இன்னும் பலர் பாதிக்கப் பட்டுள்ளார்கள் . ஆனால் வைத்திய அதிகாரிகளும் இரசாயனம் கலந்த தண்ணீர் மற்றும் கழிவுகள் இதற்கான கரணம் என்று தெரிவித்துள்ளனர் . எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை. எமக்கு வாழ்வதற்கு பணம் தேவை ஆகவே தற்போது அதிகமான பெண்கள் தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். அதுபோன்று எம்மால் உற்பத்தி செய்யப்படும் எங்களது கரும்புகளை இந்த தொழிற்சாலைக்கு விற்பனை செய்கின்றோம். அதைகூட ஒரு குறிப்பிட்ட தொகைக்கு எடுக்கின்றனர். இதனாலும் நாம் பாரிய துன்பத்துக்கு உள்ளாகியுள்ளோம். இதைபற்றி அதிகமாகபேசினால் எமது கரும்புகளை வேறு இடத்துக்கு கொடுக்கும் படி கூறுகின்றனர். எம்மை வேலையைவிட்டு வீட்டுக்கு செல்லும்படி சொல்கின்றார்கள். நாங்கள் பெண்கள் என்பதால் எங்களை ஏமாற்றுகின்றனரா? இந்த தொழிற்சாலையில் 25 வருடம் தொழில் செய்து வருகின்றோம். ஆனால் எமக்கு வருத்தம் வந்தால் கூட எங்களுக்கு உதவி செய்வதில்லை. அவர்களது சுயநலம் பற்றியே சிந்திக்கின்றனர். இந்த முதலாளித்துவம் எம்மை போன்று துன்பத்தில் இருக்கும் சாதாரண மக்களை வதைக்கின்றது . இரு உயிரை காப்பாற்ற எங்களது உயிரை விடுகின்றோம். இதுதான் இந்த சீனி தொழிற்சாலையில் நடக்கிறது. எம்மை அடிமைகளாக பார்க்கின்றனர். உயர் அதிகாரிகளை சந்திக்கப்போனால் ஏமாற்றுகின்றனர். இன்று போய் நாளை வா என்கின்றனர். எத்தனை தடவை நாம் ஏமாறுவது. நாங்கள் தனி நபர்கள் என்றால் வேறு இடத்தில் போய் வாழ முடியும். எமது பிள்ளைகளின் எதிர்காலமும் இன்று கேள்வி குறியாக உள்ளது. 10,000 ஊதியம் எடுத்தால் 15000 படிப்பு செலவு உள்ளது. எம்மை பார்ப்பதற்கு யாரும் இல்லை. எங்களை கைவிடவேண்டாம். இந்த கொடிய நோயில் இருந்து எம்மை பாதுகாக்குமாறு கண்ணீர் சிந்தினர் இந்த மக்கள். பெல்வத்த சீனி தொழிற்சாலை அதிகாரிகளே! இது உங்களின் அசமந்தபோக்கு. இதற்கு ஏன் மக்களை பழியெடுக்க நினைக்கின்றீர்கள் . இந்த மக்கள் செய்த பாவம் என்ன ? இவர்களுக்கு உதவ அரசாங்க அதிகாரிகள் மறுப்பது ஏன்? இதுபோன்ற பல மக்கள் இன்றும் வாழ்கின்றமை நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு பாராமுகமே.