மேற்கு இந்திய தீவுகள் துடுப்பாட்ட அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் பேட்டியின் போது பெண் செய்தியாளரை மது அருந்த அழைத்த சம்பவம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஸ் 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மெல்போர்ன் மற்றும் டாஸ்மேனியா அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. போட்டியின் போது மெஸ்போர்ன் அணிக்காக விளையாடி வரும் கிறில்கெயிலிடம் சேனல் 10 தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர் பேட்டி எடுத்துள்ளார். அப்போது அவருக்கு பதிலளித்த கெயில், உன் கண்களை பார்ப்பதற்காகவே இந்த பேட்டியில் கலந்து கொண்டேன் என பெண் செய்தியாளரிடம் கூறினார். மேலும், நாங்கள் இப்போட்டியில் எப்படியும் வென்று விடுவோம். அதற்கு பிறகு நாம் இருவரும் சேர்ந்து மது அருந்தலாம். நீ வெட்கப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் தர்ம்சங்கடத்துக்கு உள்ளான பெண் நிருபர் எப்படியோ பேட்டியை முடித்துகொண்டு கிளம்பினார் இந்நிலையில் கெயிலின் இச்செயலுக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பல்வேறு வீரர்களும் ரசிகர்களும் கெயிலின் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர். கெயிலின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிக்-பாஸ் போட்டியின் முதன்மை செயல் அலுவலர் ஆண்டனி எவரார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கெயிலின் நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது. இதுகுறித்து அவர் விளையாடும் அணி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்படும். மேலும், பிக்-பாஸ் கிரிக்கெட் போட்டியை குழந்தைகள், பெண்கள் மற்றும் குடும்பமாக கண்டு கழிக்கின்றனர். எனவே, இதுபோன்ற செயல்களுக்கு இங்கு இடமில்லை என்று கூறியுள்ளார்.
|