பேருந்து ஒன்றில் கடத்தப்பட்ட சுமார் நான்கு லட்சம் பெறுமதியான மரக்குற்றிகளுடன் இன்று அதிகாலை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,
கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின்படி,
உதவிப் பொலிஸ் பரிசோதகர் இந்து பிரதீபன், பொலிஸ் சார்ஜன்ட் 20167 லால் குமார, சிறி பொலிஸ் கொன்ஸ்டபிள் 57193 ஏக்கநாயக்க,79758 சோமரட்ன, 89047 சியாம், 5441 சிவஐங்கரன் ஆகியோர் கொண்ட சிறப்பு குழுவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலை அடுத்து,
இன்று அதிகாலை 3.45 மணியளவில் வடகாடு மாங்குளம் காட்டுப்பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி- யாழ்ப்பாணம் வழித்தடங்களில் பயணிக்கும் பேருந்து ஒன்றில் 12 அடி நீளமான 6×4 அளவுடைய 55 பாலை மரக்குற்றிகளை சந்தேக நபர்கள் கடத்தியுள்ளனர்.