பொகவந்தலாவையில் நூலகம் திறந்து வைப்பு

262

பொகவந்தலாவை முத்து லெட்சுமி தோட்டத்தில் நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகரும், தலைவர் மறைந்த அமரர். வீ.கே.வெள்ளையனின் ஞாபகார்த்தமாக இந்த நூலகம் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜியின் பண்முகப்படுத்தப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் கட்டியமைக்கப்பட்ட இந்தகட்டிடத்தை மலை நாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாயஅபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

அமரர். வீ.கே.வெள்ளையனின் 98வது நினைவு வருடத்தை முன்னிட்டு வீ.கே.வெள்ளையன் பிறந்த மண்ணில் இந்த ஞாபகார்த்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், அமைச்சர் பழனி திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், சங்கத்தின் பொதுச்செயலாளர்எஸ்.பிலீப், சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் வீ.சிவநேசன் உள்ளிட்ட சங்கத்தின்பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90-4 625-0-560-320-160-600-053-800-668-160-90-5 625-0-560-320-160-600-053-800-668-160-90-6

625-0-560-320-160-600-053-800-668-160-90-7 625-0-560-320-160-600-053-800-668-160-90

 

 

 

 

 

SHARE