ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற ரீதியில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதாக வரவு செலவு திட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு நாம் செய்ய வேண்டிய நீண்ட காலம் மற்றும் குறுகிய கால நடவடிக்கைகள் பல உண்டு.
நாம் அனைவரும் இதனை புரிந்து கொள்ள வேண்டும் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் அரசியல் யதார்த்தத்துடன் தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறான மூலோபாய திட்டங்களுடன் நாம் செயற்பட்டால் மாத்திரமே சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்க முடியும். இதன் காரணமாக திருத்தங்களுக்கு அமைவாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது மிகவும் முக்கியமானதாகும்.
நல்லாட்சி அரசாங்கம் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு கடனை பெற்றது. இந்த விடயம் நாட்டுக்கும் இந்த சபைக்கும் இரகசியமான ஒன்றல்ல. இன்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக கருத்துக்களை முன்வைத்த சிலர் அன்று அவ்வரசாங்கத்தில் இருந்தனர். பொறுப்புகளை ஏற்று செயல்படுமாறு கூறும் பொழுது அதற்கு முடியாது என்று கூறுகின்றனர். இவ்வாறானோர் எப்பொழுதும் புகழ் மிக்கவர் தரப்பில் இருந்தனர். பிரச்சனை சவால்களை எதிர்கொள்வதே எமது கொள்கை ஆகும்.