பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் 23ஆம் திகதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான கே.ஏ.டீ.எஸ் குணவர்தனவின் மறைவினை அடுத்து அவரது பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்காக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கடந்த செவ்வாயன்று பதவியேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, சரத்பொன்சேகாவிற்கு வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கான மாநகர அபிவிருத்தி அமைச்சு வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.