கம்பஹா – ஊராபொல பிரதேசத்தில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை, பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, அவர்களிடமிருந்து 3 முச்சக்கர வண்டிகள், ஒரு மோட்டார் வண்டி மற்றும் பல தங்க பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் யக்கல மற்றும் கலகேதரை பிரதேசத்தினை சேர்ந்த சந்தேக நபர்கள் நேற்று கம்பஹா நீதவான் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.