புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ எனும் விசேட நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சோதனை நடவடிக்கை
அந்த வகையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று (13.03.2024) மாலை விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதிலும் எந்தவித சந்தேகத்திற்கிடமான பொருட்களும் மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.