ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்யும் விதமாக பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலைபேசியில் கலந்துரையாடியதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில், சி.ஐ.டி. முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதுவரை சி.ஐ.டி.யின் மனிதப் படு கொலைப் பிரிவு முன்னெடுத்துள்ள சிறப்பு விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மையப்படுத்தி பொலிஸ் மா அதிபர் பூஜித்திடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை எப்போது விசாரிப்பது என்பது குறித்து நேற்று வரை அறிவிக்கப்படவில்லை.