பொலிஸ் நிலையத்திற்குள் தற்கொலைக்கு முயன்ற நபர்

264
அம்பலாந்தொட்ட பொலிஸ் நிலைய சிறையில் சுருக்கிட்டு கொண்ட நபரொருவர், ஆபத்தான நிலையில் ஹம்பாந்தொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக குறித்த சந்தேக நபர் நேற்று அம்பலாந்தொட்ட பொலிஸார் கைது செய்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சந்தேக நபர் நேற்று இரவு தான் அணிந்திருந்த சாரத்தினை பயன்படுத்தியே இவ்வாறு சுருக்கிட்டு கொண்டதாக அம்பலாந்தொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1100131302

SHARE