போட்சிட்டி நிர்மாணப் பணி நிறுத்தம்! நாளொன்றுக்கு 380,000 டொலர்கள் நஷ்டம்

352
கொழும்பு போட்சிட்டி நிர்மாணங்கள் இடைநிறுத்தப்பட்டமை காரணமாக நாளொன்றுக்கு 380, 000 அமெரிக்க டொலர்கள் நஷ்டம் தமக்கு ஏற்படுவதாக நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிசிசிசி என்ற சீனாவின் நிர்மாணம் மற்றும் தொலைத்தொடர்புகள் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பு போட்சிட்டி 100 வீத தனிப்பட்ட நிதியின்கீழ் 1.4 பில்லியன் டொலர் நேரடி நிதியூட்டலில் 2014 இல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் இடைநிறுத்தம் காரணமாக கடலை நிரப்பி மேற்கொள்ளப்படும் 200 மீற்றர் நீர்நிரப்பு நிர்மாணம் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 4000 பேர் நேரடியாகவும் 1000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புக்களை பெற்றிருந்தனர் என்று சீன நிறுவனம் கூறியுள்ளது.

SHARE