போதைப்பொருட்களுடன் மூவர் கைது

118

 

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த மூவரும் நேற்று (19.12.2023) கைதாகியுள்ளனர்.

மீட்கப்பட்ட போதைப்பொருள்
34 வயதுடைய அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனைக்கமைய 914 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை கைது செய்வதற்காக சென்றபோது முள்ளியவளை புதரிகுடா பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 26 வயதுடைய கணவன் மனைவி இருவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைத்து 214 கிராம் கஞ்சாவுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தேடுதல் பணிகள்
இந்நிலையில், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பிரதான சந்தேகநபர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் கைதான மூவரும் இன்று (20.12.2023)முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE