போதைப் பொருள் வர்த்தகர் முஹமட் சித்திக் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது பற்றி கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவிடம் அறிவித்துள்ளனர்.
சித்திக்கின் மனைவியினது கணக்கில் சிலர் பணம் வைப்புச் செய்துள்ளதாகவும் இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், இன்டர்போலும் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனைவியின் கணக்குகளை சித்திக்கே முதலில் பயன்படுத்தி வந்ததாகவும் பின்னர் மனைவி பயன்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் வைத்து சித்திக் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்திக் குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.