போதை மருந்து கடத்திய நபருக்கு கொடூர தண்டனை: ரஷ்ய பிரிவினைவாதிகள் அட்டகாசம் (வீடியோ இணைப்பு)
309
ரஷ்யாவில் போதை மருந்து கடத்திய நபருக்கு ஐ.எஸ்.குழுவினர் போன்று அங்குள்ள பிரிவினைவாதிகள் தண்டனை வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு உக்ரைன் பகுதியில் வைத்து ரஷ்ய பிரிவினைவாதிகள் இந்த கொடூர தண்டனையை நிறைவேற்றியதுடன் அதை வீடியோவாக பதிவிட்டுள்ளனர்.
ரஷ்யாவில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டு வந்த ஒரு நபரை கைது செய்துள்ள அந்த பிரிவினைவாதிகள், அவரை மரத்தாலான தூணில் கைகளை இணைத்து கட்டி வைத்து முதலில் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து பிரிவினைவாதிகளில் ஒருவர் வந்து அந்த போதை மருந்து கடத்தல் நபர் மீது மின்சாரம் பாயும் கம்பியால் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் பலமுறை கெஞ்சியும் அவரை விடுவிக்க அந்த பிரிவினைவாதி ஒப்புக்கொள்ளவில்லை,
போதை மருந்து கடத்தல் நபர்களை கூண்டோடு அழிப்பதுவே தங்களின் கடமை என அட்டகாசம் செய்யும் அந்த பிரிவினைவாதி,
போதை மருந்து கடத்தும் நபர்களுக்கு இதுவே தண்டனை எனவும் அந்த வீடியோவில் பிரிவினைவாதிகள் கூறுகின்றனர்.
போதை மருந்து கடத்திய நபரை சில நாட்களாக காணவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிவினைவாதிகள் சித்திரவதை செய்து கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.