போரால் அங்கவீனமானவர்கள் என்றுமே போராட்டத்தின் அடையாளச் சின்னங்கள்!

223

எங்களது போராட்டத்தை முடித்து விடலாம். தூபிகளை இடித்து விடலாம். ஆனால், போரால் அங்கவீனமானவர்கள் என்றுமே போராட்டத்தின் அடையாள சின்னங்களாக இருப்பார்கள் என வன்னி விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் ச.ரூபராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். வணிகர் கழகத்தின் நிதிப் பங்களிப்பில் வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த விழிப்புலனற்ற முன்னாள் போராளிகளின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்பு உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று யாழ். வணிகர் கழக மண்டபத்தில் வணிகர் கழகத் தலைவர் இ. ஜெயசேகரம் தலைமையில் நடைபெற்றது.

முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட 189 பிள்ளைகளுக்கு மூன்று இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வன்னி மாவட்டத்தில் தற்போது தான் நாங்கள் பிறந்த குழந்தைகள் போன்று பொருளாதார ரீதியாகத் தவழ்ந்து வரும் நிலை. இந்த நிலையில் வன்னியில் வறுமை தாண்டவமாடி கொண்டிருக்கிறது.

இதன் காரணமாகச் சாதாரண மக்களனைவரும் மிகுந்த கஸ்டங்களைஎதிர்நோக்கியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் விழிப்புலனற்ற நாம் எவ்வாறான கஸ்டங்களை எதிர்நோக்குகிறோம் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எங்களுடைய வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் என்பது வன்னி மாவட்டத்தின்கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருக்கின்றவிழிப்புலனற்றவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்குவதே எமது நோக்கமாகும்.

இந்த சங்கமானது கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பல சவால்களின்மத்தியிலும் செயற்பட்டு வருகிறது.

எமது சங்கத்தின் முக்கிய நோக்கம் விழிப்புலனற்றவர்கள் எங்கு வாழ்ந்தாலும்அவர்கள் சுய கெளரவத்துடன் வாழ வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

அந்த அடிப்படையில் இவர்களும் சமுதாயத்தின் ஒரு அங்கம். ஆகவே, இவர்களும் சமூகத்தில் உயர் நிலையை அடைய வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

எங்களது சங்கத்தைப் பொறுத்தவரை 268 பேர் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள்.அவர்களில் 90 வீதமானவர்கள் எமது நாட்டிலே கடந்த காலங்களில் நிலவிய போர்காரணமாக எழுந்த சமூதாயத் தேவைக்காகப் புறப்பட்டவர்கள்.

எங்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டுமென்பதற்காகவே நாங்கள் எமது அங்கங்களை இழந்து நிற்கிறோம்.

அவர்கள் பிறப்பிலே உடல்களில் அங்கவீனம் ஏதுமின்றி நல்ல கால், கைகளுடன்பிறந்தவர்கள்.

ஆனால், அவர்கள் எமது சமூதாய தேவையை உணர்ந்து போராட்டத்தில் பங்குபற்றி தமது கை, கால்களை, கண்களை, இழந்து நிற்கிறோம்.

இவ்வாறு உடல் அங்கவீனமானவர்களை இந்தச் சமூதாயம் ஓரமாக ஒதுக்கிவிட்டுத் தாங்கள் வாழ்ந்து விட்டுப் போக முடியாது.

நிச்சயமாக இவர்களையும் தங்களது ஒரு அங்கமாகக் கருத வேண்டும். ஏனெனில், இவர்கள் தங்களது வீட்டுத் தேவைக்காகவோ, சொந்தத் தேவைக்காகவோபோகவில்லை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சிந்திய இரத்தமும், வியர்வையும் தான் வெளிநாடுகளில் எம்மவர்களுக்குப் பிரஜாவுரிமை கிடைப்பதற்குக் காரணம்.

ஆகவே, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் உதவி புரிய வேண்டியது புலம்பெயர்ந்து வாழும் எம் சொந்தங்களின் கடமை.

எமது புலம்பெயர் சொந்தங்களில் ஒரு சிலர் தான் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்குஉதவிகள் புரிய வேண்டும் என நினைக்கிறார்கள்.

இதேவேளை, போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களை வைத்து வெளிநாடுகளில் உழைப்பவர்களுமிருக்கிறார்கள். இவ்வாறான நிலைமாற வேண்டும் எனவும் இதன்போது விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் ச.ரூபராஜா குறிப்பிட்டுள்ளார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-17 625-0-560-320-160-600-053-800-668-160-90-18 625-0-560-320-160-600-053-800-668-160-90-19 625-0-560-320-160-600-053-800-668-160-90-20 625-0-560-320-160-600-053-800-668-160-90-21

SHARE