போரின் பாதிப்பை தம்மில் சுமந்து நாடாளுமன்றம் செல்லும் முதல் தமிழ்ப் பெண் உறுப்பினர்

328

 

இந்த முறை நாடாளுமன்றத்துக்கு 63 புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முக்கியமானவர் வன்னியை சேர்ந்த சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவாகும்.

download

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசிய ப்பட்டியல் மூலம் அவர் இந்த தடவை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இவர், எதிர்வரும் 8ஆம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்து கொள்வார்.

துணுக்காய் பிரசேத செயலகத்தின் திட்டமிடல் பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய அவர், 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற ஷெல் வீச்சு சம்பவம் ஒன்றின்போது ஒருகாலை இழந்தார்.

எனினும் செயற்கைக்காலுடன் தற்போது அவர் தமது கடமைகளை செய்துவருகிறார்.

இந்தநிலையில் போரின் காரணமாக அவையவம் இழந்த முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராக தாம் இருப்பதாக சாந்தி குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு, தம்மை போல பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பமுடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

SHARE