போர் வெற்றி விழா நிறுத்தம் – காரணத்தை கண்டு பிடித்தார் பசில்

164

அனைத்துலக அழுத்தங்களினால் தான், சிறிலங்கா அரசாங்கம் போர் வெற்றி விழாவைத் தவிர்த்திருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது, போர் வெற்றியை கொண்டாட வேண்டாம் என்று வெளிநாட்டுத் தூதுவர்கள் அழுத்தம் கொடுத்தனர்.

மேற்குலக நாடுகளின் தயவைப் பெற முடியும் என்பதற்காகவே, எமது நாடு விடுவிக்கப்பட்ட வெற்றியைக் கொண்டாட சிறிலங்கா அரசாங்கம் விரும்பவில்லை.” என்றும் அவர் தெரிவித்தார்.Sri-Lankan-Army

SHARE