போலியான பத்திரங்களை தயாரித்து வந்த 4 பேர் கைது

201

போலியான பத்திரங்கள் தயாரிக்கும் நான்கு பேரை பாணந்துரை வலான மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

புதுக்கடை நீதிமன்றத்துக்கு அருகாமையிலுள்ள இரு மாடிக் கட்டிடத்திலிருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10 ஆயிரம் ரூபாவுக்கு மேலதிகமான தொகையைப் பெற்றுக் கொண்டு, போலியான சான்றிதல்களை தயாரிக்கும் குற்றச் செயலில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதிவாளர் நாயகத்தின் முத்திரைக்கு சமமான முத்திரையுடன் அங்கிருந்த காரியாலய உறுப்பினரும் அவரது தகப்பனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிறப்புச் சாட்சிப் பத்திரம், கடவுச் சீட்டு போன்றவற்றை ஒரு சில மணித்தியாலங்களுக்குள் செய்து கொடுத்து வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.pole

SHARE