போலியான சாட்சியமளித்ததாக அண்மையில் மரணமான எம்பிலிப்பிட்டி இளைஞரின் மனைவிக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது.
எம்பிலிப்பிட்டி துணைப் பொலிஸ் அத்தியட்சகர் தர்மரட்ன சுமித்தை கட்டிடமொன்றிலிருந்து தள்ளி விட்டதனால் எம்பிலிப்பிட்டி சுமித் பிரசன்ன ஜயவர்தன மரணமானார் என அவரது மனைவி பொய் சாட்சியமளித்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சுமித்தின் மனைவி பொய்சாட்சியமளி;க்க தூண்டிய சட்டத்தரணிக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்படவுள்ளது.
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் இவ்வாறு வழக்குத் தொடர தீர்மானித்துள்ளனர். குற்றவியல் சட்டத்தின் 191ம் சரத்தின் அடிப்படையில் வழக்குத் தொடரப்படவுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றச் செயல் ஒன்று தொடர்பில் எவரேனும் பொய் சாட்சியமளித்தால், குற்றவியல் சட்த்தின் 191ம் சரத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்து அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
சுமித் பிரசன்னவின் மரணத்திற்கான காரணம் பற்றிய விபரங்கள் நேற்று எம்பிலிபிட்டி நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
சுமித் மரணம் தொடர்பில் பொலிஸார் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி சுமித் பிரசன்ன, கட்டிடமொன்றிலிருந்து தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளதாகவும் இதனால் போலியான சாட்சியமளித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.