ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் செகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளி;ப்பதற்காகவே தான் பதவிவிலகியுள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.