மக்களின் தேவைகளுக்காக காணிகளை விடுவிக்கும் செயலணியால்.முஸ்லீம் குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள்

191

 

மக்களின் தேவைகளுக்காக காணிகளை விடுவிக்கும் செயலணியால்.முஸ்லீம் குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள்

.
ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் ஒரு தொகுதி முஸ்லீம் மக்களை குடியேற்றம் செய்வதற்கான முதல்கட்ட வேலைகளே இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குடியேற்றதிற்கான மேற்பார்வைக்கு வருகைதந்த அதிகாரிகளுடன் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடியேற்றதிற்கு எதிராக வாய்த்தர்க்கதில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் செயணியின் வருகையை அறிந்த சில பொது மக்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்து அதிகாரிகளுடன் வாக்குவாததில் ஈடுபட்டதோடு இப்பகுதியில் பூர்வீகமாக மக்கள் வாழ்ந்திருந்தால் குடியேற்றம் செய்வதில் ஆட்சேபனை இல்லை எனவும் புதிய குடியேற்றங்களை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்பதையும் குறிப்பிட்டிருந்தனர். வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அதிகாரிகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் வரவழைக்கப்பட்டதும் குறிப்பிடதக்கது.

இந்தநிலையில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், இன்று வருகைதந்துள்ள குறித்த குழுவானது முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் குடியேற்றம் ஏனைய தேவைகள் தொடர்பில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் அமைக்கபட்ட குறித்த குழுவே இன்று வருகைதந்துள்ளது.

எமது முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் பயன்பாட்டுக்கு தேவையான காணிகள் தொடர்பில் எம்மால் அறிவிக்கபட்ட காணிகளை ஆராயும் பொருட்டும், ஏற்கனவே தமிழ் மக்களால் காடுகளை அழித்து அமைக்கப்பட்டுள்ள காணிகளை மேற்பார்வைசெய்து அனுமதி வழங்குவது தொடர்பில் ஆராயும் பொருட்டும் வருகைதந்துள்ளதோடு மற்றும் இந்த கூளாமுறிப்பு காணி தொடர்பில் ஏற்கனவே தவறான கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்ளும் பொருட்டே இந்த குழுவினர் வருகைதந்துள்ளதாகவும் இந்த காணிகளில் குடியேற்றம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவே தீர்மானங்களை மேற்கொள்ளும்

SHARE