மக்கள் விரக்தியில் இருக்கிறார்கள் என்பதையே மாணவனின் தற்கொலை உணர்த்துகிறது- இரா.சம்பந்தன்-

320
யாழ் கோப்பாய் மாணவன் செந்தூரனின் தற்கொலை வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் மிகவும் விரக்தியில் உள்ளார்கள் என்ற செய்தியை தெளிவாக உணர்த்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
செந்தூரனின் பெற்றோருக்கும் உறவினர்கள் நண்பர்களுக்கும் தமிழ் மக்கள் சார்பில் ஆழந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.  இதேவேளை குறித்த மாணவன் கவலைக்குரிய தீர்மானத்திற்குச் சென்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது என்று கூறிய எதிர்கட்சித் தலைவர் இவற்றை தடுப்பதற்கு அரசாங்கம் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர் பிரிக்கப்படாத இலங்கைக்குள் சமத்துவமாக தமிழ் மக்கள் வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மக்கள் கடந்த காலத்தில் அடிப்படைவாத சக்திகளை நிராகரித்துள்ளனர் என்று குறிப்பிட்ட அவர் மகிந்த அரசாங்கம் வடகிழக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை கவனிக்காது சொந்த நிகழ்ச்சி நிரலில் இயங்கி வந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
SHARE