இறுதி யுத்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல் கள் தொடர்பில் நீதி வழங்கும் விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதி களுக்கு எவ்விதத்திலும் இடமில்லை. இது குறித்து ஜனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு எதிரான வகையில் கருத்துகளை தெரிவித்து நாட்டின் அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்தும் வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரரேரணையை கொண்டு வருவதற்கான சாத்தியம் குறித்தும் ஆராய்ந்து வருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இறுதி யுத்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முன்னெடுக்க சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்புகளை பெறுவதில் தவறில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பில் வினவிய போதே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்பன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில்தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.
தேசிய அரசாங்கம் என்ற வகையில் ஒருமித்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கும் இந்த அரசாங்கமானது நாட்டின் சுயாதீன தன்மைக்கு பங்கத்தை விளைவிக்கும் பாரிய விடயம்தொடர்பில் வேறுப்பட்ட கருத்துகளை தெரிவித்து சர்வதேசத்துடன் விளையாடி கொண்டிருக்கின்றது
எந்தவொரு விசாரணை நடவடிக்கைகளுக்கும் எமது நாட்டின் நீதித்துறை சட்டத்தின் பிரகாரம் சர்வதேச நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் விசாரணையாளர்களையும் நாட்டுக்குள்அனுமதிக்க முடியாது. இவ்விடயத்தில் நாம் உறுதியாகவே உள்ளோம்.
இறுதி யுத்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி வழங்கும் விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளுக்கு எவ்விதத்திலும் இடமில்லை என தொடர்ச்சியாக தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி தெட்ட தெளிவாக குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான நிலையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அன்மையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முன்னெடுக்க சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்புகளை பெறுவதில்தவறில்லை என தெரிவித்திருந்தார்.
நாட்டின் ஜனாதிபதி கூறும் விடயம் தொடர்பில் எதிரான மாற்று கருத்துகளை கூறும் இவரின் செயற்பாடானது மிகவும் கண்டிக்கத்தக்கது. அந்தவகையில் அமைச்சர் ம்களவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம். அந்தவகையில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளின் இவர்தொடர்பில் நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவருவது தொடர்பில்ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினை சேர்ந்த நாம் ஆராய்ந்து வருகின்றோம்
நல்லாட்சி அரசாங்கத்தின் அங்கத்துவம் பெறும் உறுப்பினர்கள் எவ்வாறான கோரிக்கைகளை விடுத்தாலும் இவ்விடயம்தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை நாம்ஒரு போதும் ஏற்றுக்கொள்ள போவது இல்லை. அதோடு எமது நாட்டின் நீதித்துறைக்கு சவால்விடும்செயற்பாடுகளுக்கு எவ்வாறாயினும் இடம்மளிக்க முடியாது என்றார்.