மசாஜ் கிளப் என்ற பெயரில் விபசாரம்: 5 அழகிகள் மீட்பு: புரோக்கர்கள் 3 பேர் கைது: எல்லாம் சரி, கற்பு, ஒழுக்கம் எல்லாம் மீண்டும் தமிழகத்தில் எப்பொழுது வரும்?

835

மசாஜ் கிளப் என்ற பெயரில் விபசாரம்: 5 அழகிகள் மீட்பு: புரோக்கர்கள் 3 பேர் கைது: எல்லாம் சரி, கற்பு, ஒழுக்கம் எல்லாம் மீண்டும் தமிழகத்தில் எப்பொழுது வரும்?

சென்னையில் பாடி மஸாஜ் மறுபடியும் விபச்சாரமாக உருவெடுக்கிறது. இந்த தலைப்பில் ஏற்கெனவே விவரமாக ஒரு இடுகையில் விவரித்துள்ளேன்[1]. சென்னையில் பாடி மஸாஜ் மறுபடியும் விபச்சாரமாக உருவெடுக்கிறது. ஓட்டகளில்

 ……………………சென்னை விபச்சாரத்தில்பிரபலமாகிறது[2] – மேனாட்டுகலாச்சாரத்தின் தாக்கம்உள்நாட்டு சினிமாமோகம்தார்மீக எண்ணங்கள் அழிவு!

இது இப்பொழுது, பல்வேறு பெயர்களில் நாகரிகமாக நடந்து வருகிறது. பணம் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம், அனுபவுக்கலாம் என்ற முறையில்  வளர்த்துவிட்ட நவீனக் காமக்கலைதான், பாடி மஸாஜ். 1979-1980களில் இது சென்னையில் அத்தகைய மோசமான நிலைக்குச் சென்றபோது, தடை செய்யப்பட்டது. அப்பொழுது வீட்டுக்கு வீடு மசாஜ் சென்டர், மசாஜ் பார்லர் என்ற பெயரில் ஆரம்பித்து பிறகு விபச்சாரமாக மாறியது. அப்பொழுதே, சபலமுள்ள பள்ளி-கல்லூரி மாணவர்கள் அங்கு சென்று வந்தபோது, பிரச்சினை பெரியதாகி தடை செய்யப்பட்டது. குறிப்பாக, அரசியல்வாதிகள் சிலர் அதில் சம்பந்தப்பட்டதால், விஷயம் அப்படியே அமுக்கப் பட்டது.

images (3)

பாடி மஸாஜ் பல ரூபங்களில்: இப்பொழுது, பப்புகள் பெயரில், ஸ்பா, ஹெல்த் கிளப், அரோமா தெராபி, அக்யூபிரஸ்ஸர் சென்டர், ஆயுர்வேதிக் சென்டர், என்று பல உருவங்களில் செயல்பட்டு வருகின்றன. குறைந்த சம்பளம் கொடுப்பது,

 …………………கற்ப்பைப் பற்றி கேவலமான கருத்துகளைச் சொல்லும்[3] போது, விபச்சாரம் பெருகத்தானே செய்யும்? தார்மீகம் எங்கு இருக்கும்? இருப்பினும் “நடிகைகளின் கற்ப்பைப்” பற்றி பேசினால், நடிகைகளுக்கு கோபம் வருகிறது[4].

மறைமுகமாக தொல்லைக் கொடுப்பது, பாஸ்போர்ட்டைப் பிடுங்கி வைத்துக் கொள்வது, கஸ்டமர்களை அளவிற்கு அதிகமாக தொல்லைக் கொடுக்க செய்வது, அவ்வாறு செய்தாலும் பொறுத்துப் போக சொல்வது, அவ்வாறு செய்யும் காட்சிகளை படமெடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவது, முதலியன அவர்களுடைய வழக்கமான வேலைகள். இதே முறைகள் தாம் இப்பொழுதும் பின்பற்றியது தெரிகிறது. ஆக, வருடங்கள் மாறினாலும், குற்றவாளிகளின் புத்தி மாறவில்லை என்பது தெரிகிறது. மேலும், சில பெண்களுக்கும் இந்த வியாதி பிடித்துக் கொண்டது. ஆமாம், ஆண்கள் பெண்களுக்கு பாடி மஸாஜ் செய்கிறேன் என்று கிளம்பி விபரீததில் முடிந்து விட்டது. இப்பொழுது வெளிவந்துள்ளது வெறும் துளிதான், இன்னும் பெரிதாக இருக்கிறது, என்று கூறியிருந்தேன்.

images (2)

கிழக்குக் கடற்கரைச் சாலை விபச்சாரம் மிகவும் பிரசித்தியானது. ஏனெனில், இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மிகவும் பெரியவர்கள் என்பதனால், பல தடவை கண்டு கொள்ளமலும் இருந்திருக்கின்றனர்.

 …………………..two people from Kerala were running a fake ayurvedic spa in Injambakkam on East Coast Road. A special team, which was monitoring the activities of the spa, raided it and arrested Dilip alias Manoj (29) and Sibin Jacob (23). “They pretended to offer massages but were running a brothel,” the police said[5]. வழக்கமான பாணியைப் பின்பற்றிய மசாஜ் பெண்கள் சிக்கிக் கொண்டனர்.

இப்பொழுது மறுபடியும் அத்தகைய செய்தி வந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் பண்ணை வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று பாலியல் புரோக்கர்களை காவல் துறையினர் கைது செய்து அத்தொழிலில் ஈடுபட உள்ள பெண்களையும் மீட்டனர் (24-02-2012). இண்டர்நெட் மூலம் மசாஜ் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை கவர்ந்து விபச்சார தொழில் செய்வதை தடுத்து நடவடிக்கை எடுக்கவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் அப்பாவி இளம் பெண்களை மீட்கவும் சென்னை காவல் ஆணையாளர் ஜே.கே.திரிபாதி மற்றும் காவல் கூடுதல் ஆணையாளர் அபய் குமார்சிங் ஆணையின்படி சென்னை மத்திய குற்றப்பரிவு துணை ஆணையாளர் டாக்டர். எம். சுதாகர் ஆகியோர் அறிவுரைகளின்படி, சென்னை விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் எம்.கிங்ஸ்லின் மேற்பார்வையில் ஆய்வாளர் எஸ்.சாண்டியாகோ தலைமையில் போலீஸ் பார்ட்டியினர் கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்

images (1)

cutz n glitz, a unisex n salon : இவையெல்லாம் பெரிய இடத்து சமஜாரங்கள் தாம். சென்னை பனையூர் பகுதியில் இ.சி.ஆர்.சாலையில் cutz n glitz, a unisex n salon என்ற பெயரில் இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட மசாஜ் செண்டரில் செல்போன் எண்ணிற்கு விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் போன் செய்து வாடிக்கையாளர் போல் பேச்சுக் கொடுத்தபோது மறுமுனையில் பேசிய நபர் நவீன முறையில் மசாஜ் செய்கிறோம், அதோடு தாங்கள் விருப்பப்பட்டால் அங்கு மசாஜ் செய்யும் வெளி மாநில அழகிகளில் ஒருவருடன் உல்லாசமாக இருக்க ரூ.10,000/- செலவாகும் என்றும், குறிப்பிட்ட இடத்திற்கு பணத்துடன் வருமாறு கூறினார்[6]. டிப்-டாப் உடையில் சென்ற விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரை, வாடிக்கையாளர் என தவறாக நினைத்து இ.சி.ஆர்.ரோட்டில் கடற்கரை ஓரம் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் உள்ள மேற்படி மசாஜ் செண்டருக்கு அழைத்து சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து சென்ற விபச்சார தடுப்பு பிரவு ஆய்வாளர் மேற்படி இடத்தில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த பிறகு அதிரடியாக அங்கு புகுந்து விபச்சாரம் நடத்தி வந்த சீனிவாசன் (34), ராம்குமார் (36), மற்றும் சரவணன் (31) என்பவர்களை கைது செய்து அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்த வைத்திருந்த மும்பையை சேர்ந்த ஐந்து இளம் அழகிகளை மீட்டனர்.

கைதுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஒழுக்கம் வருமா?போலீசாரின் விசாரனையில் சீனிவாசன் என்பவர் மேற்படி மசாஜ் – ஸ்பா செண்டரின் உரிமையாளர் என்பது

 வழக்கம் போல செய்திகள் வருவது, கைது செய்வது எல்லலம் சரிததன். ஆனால், கற்பு, ஒழுக்கம் என்றெல்லலம் பேசுகின்ற தமிழச்சிகள், இனமான வீரர்கள், மடலேறு-அடலேறுகள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

தெரியவந்தது. மேற்படி சொகுசு பங்களாவை அவர் மாத வாடக்கைக்கு எடுத்து மசாஜ் என்ற பெயரில் வெளி மாநில அழகிகளை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி பங்களாவின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளதாக தெரியவந்தது. வாடிக்கையாளர்கள் மனம் கவரும் வகையில் மிகவும் ஆடம்பரமான முறையில், உள் அலங்காரத்துடன் உல்லாசமாக இருக்க அந்த பண்ணை வீட்டை விபச்சாரத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.

 

 

SHARE