மசாஜ் நிலையம் என்ற, பெயரில் பத்தரமுல்லை பகுதியில் இரண்டு மாடி வீடொன்றில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது .
கடந்த 15 ஆம் திகதி தலங்கம காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பு தேடுதலின் போது அதன் பெண் முகாமையாளரும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று பெண்கள் 21 தொடக்கம் 37 வயதுடையவர்கள் என்றும் நுவரெலியா, அநுராதபுரம் மற்றும் கோட்டை பிரதேசங்களில் வசிப்பவர்கள் என்றும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
வியாபாரிகளே அங்கு அதிகமாக வந்து சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.