மட்ஃ சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கடந்த 14 ம் திகதி பாடசாலை அதிபர் மனோ தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாருமாகிய துரைராசசிங்கம், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன், மட்டக்களப்பு கோட்டைக் கல்வி அதிகாரி சுகுமார், ஆகியோருடன் அவுஸ்திரேலிய பழைய மாணவர் சங்க பிரதிநதிகள், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.