மட்டக்களப்பில் அனைத்து பகுதிகளும் பாகுபாடு இன்றி அபிவிருத்தி செய்ய வேண்டும்- சிறிநேசன் வேண்டுகோள்

268

 

srinesanநல்லாட்சி அரசாங்கத்தில் பாகுபாடின்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இவ்வருடத்துக்கான முதலாவது கூட்டம், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த கால 30 வருட யுத்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். எனவே, இந்த மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் எந்தவித வேறுபாடுகளின்றி அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதற்காக சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்பதுடன், சகோதர இனத்தைச் சேர்ந்த இணைத்தலைவர்களும் ஒன்றுபட்டு இந்த மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

SHARE