மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் படுகாயம்!

269

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணிப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஊறணி சந்திப்பகுதியில் இன்று(23) பிற்பகல் வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது கன்டர் ரக வாகனம் மோதியதன் காரணமாகவே குறித்த விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தின்போது இருதயபுரத்தை சேர்ந்த மயூரன்(52வயது), அவரது மகனான அபிரஞ்சிதன்(12வயது) மற்றும் சகோதரியின் மகனான தர்சானந்த்(12வயது) ஆகியோரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அங்கு ஒன்றுகூடிய அப்பகுதி மக்கள் முறையான விசாரணை முன்னெடுக்கப்படும் வரையில் வாகனத்தை கொண்டு செல்ல இடமளிக்கமாட்டோம் என்று வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்வதை தடுத்தனர்.

 

இதேவேளை இங்கு வந்த மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி மகிந்த உரிய விசாரணை செய்யப்படும் என வழங்கிய உறுதிமொழியை அடுத்தே வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல அனுமதித்தனர்.

குறித்த கன்டர் வாகன சாரதி, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றியே வாகனத்தை செலுத்தி வந்துள்ளதுடன் வாகனமும் முறையான அனுமதியின்றி செலுத்தி வரப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதிக்கு வந்த மட்டக்களப்பு சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் செ.ராஜன் தெரிவித்தார்.

வாகனம் செலுத்தும்போது வருடாந்த வாகன பதிவு சான்றிதழ் வாகனத்தின் முன்பக்கத்தில் காட்சிப்படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளபோதிலும் குறித்த வாகனத்தில் அந்த சான்றிதழ் காட்சிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90-4

விபத்து தொடர்பில் கன்டர் ரக வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE