மட்டக்களப்பில் இந்து கிறிஸ்தவ வழிபாடுகளுடன் சுனாமி நினைவு தினம்

323
சுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 11வருடம் நிறைவடைகின்றது. இதனையொட்டி சுனாமி தாக்கத்தினால் அழிக்கப்பட்ட இலங்கையின் நான்காவது மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

மட்டக்களப்யுபு மாவட்டத்தில் மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, வாகரை ஆகிய பிரதேச செயலக பிரிவுகள் சுனாமி தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இம்மாவட்டத்தில் சுனாமியினால் 2800 பேர் பலியானதுடன் 600க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

நாவலடி, டச்பார், புதுமுகத்துவாரம் ஆகிய கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டன.இக்கிராமத்தில் மாத்திரம் 1800பேர் பலியாகினர்.

நாவலடி, திருச்செந்தூர் கிராமத்தில் இடம்பெற்ற சுனாமி நினைவு தின நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், என்.சிறினேசன், சமய மற்றும் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டதுடன், இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பலர் தங்களது உறவுகளை நினைத்து கண்ணீர் மல்க கதறியழுதனர்.

மட்டக்களப்பில் இந்து கிறிஸ்தவ வழிபாடுகளுடன் சுனாமி நினைவு தினம்

மட்டக்களப்பு புதியமுத்துவாரம் பகுதியில் சுனாமி அனர்த்தத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இந்து மற்றும் கிறிஸ்தவ வழிபாடுகள் நடைபெற்றன.

புதிய முகத்துவாரத்தில் உள்ள சுனாமி நினைவுத்தூபி அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிவஸ்ரீ சி.குகநாதன் சர்மாவினால் கிரியைகள் நடாத்தப்பட்டதுடன் விசேட ஆத்ம சாந்தி பூஜையும் நடாத்தப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினாலும் விசேட பிரார்த்தனைகள் நடாத்தப்பட்டன.

கல்முனை மற்றும் பெரியகல்லாறில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

இன்று சுனாமி பேரலையின் 11வது ஆண்டினை நினைவு கூறும் முகமாக கல்முனையில் அமையப்பெற்றுள்ள சுனாமி நினைவாலயத்தில் கடலலையினால் காவுகொள்ளப்பட்ட உறவுகளை நினைத்து காலை 8.55 மணியளவில் இறந்தவர்களின் உறவுகளால் சுடர் ஏற்றி நினைவலைகள் பகிரப்பட்டன.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின் தாக்கம் 10 வருடங்கள் கடந்து சென்றாலும் அதன் வடு இன்றும் நீங்காத ஒன்றாகவே இருந்து வருகின்றது தங்களது உறவுகளை நினைத்து ஏங்கும் இந்த உறவுக்ள இன்னும் அந்த வடுவில் இருந்து விடுபடாதவையை காட்டி நிற்கின்றது.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசங்களை 2004 ஆண்டு மார்கழி மாதம் 26 ஆம் திகதி சுனாமி ஒருகனம் புரட்டிப்போட்ட நிகழ்வில் கல்முனையிலே 499 பேர் அந்த சுனாமியின் கோரத்தாண்டவத்திற்கு இரையானார்கள்.

இனிமேல் இவ்வாறான ஒரு சுனாமியினை சந்திக்ககூடாது என உறவுகளை இழந்த மக்கள் விம்மி அழுகின்றார்கள்.

பெரியகல்லாற்றில் சுனாமி நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு இரு இடங்களில் நடைபெற்றது.

பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலயத்திற்கு முன்பாக ஜோன் டி பிறிற்றோ கழகம் ஜஸ்டின் தலைமையில்  தேற்றாத்தீவு பங்குத் தந்தை நிர்மல் சூசை ஈகைச் சுடன் ஏற்றி வைப்பதையும்,

பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்க கழகம் பெரியகல்லாறு வஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக கழகத்தின் உப தலைவரும் பொறியியலாளருமான விவேக்சந்திரன் ஈகைச் சடா ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

SHARE