மட்டக்களப்பில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை அவயவங்கள்

294
யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் கால்கள் மற்றும் செவிப்புலங்களை இழந்த 167 பேருக்கு செயற்கை அவயவங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு றோட்ரிக்கழக ஹெரிட்டேஜ் நிறுவனத்தால்  3220 அவயவங்களும், இந்தியா றோட்ரி கழகத்தால்  2928 செயற்கை அவயவங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன் தலைமை தாங்கினார்.

இதன் போது சுமார் 1 கோடி 26 இலட்சம் பெறுமதியான செயற்கை அவயவங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE