மட்டக்களப்பு, உன்னிச்சைக்குள நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில்

512

அதிகாரிகளால் தங்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் எவையும் சரியாக நிறைவேற்றப்படுவது இல்லை எனக் கூறி மட்டக்களப்பு, உன்னிச்சைக்குள நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் பெரும்போகச் செய்கைக்கான கூட்டம் நடைபெற்றபோது, அதில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இக்கூட்டத்தை விவசாயிகள் பகிஷ்கரித்து பிரதேச செயலக வளாகத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவிக்கையில்,

‘கடந்த 20ஆம் திகதி பெரும்போகச் செய்கைக்கான கூட்டம் நடத்துவதாக விவசாயிகளுடன் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்பட்டது. ஆனால், பின்னர் அந்தத் திகதி அரசியல்வாதிகளின் சௌகரியத்துக்கேற்ப இன்றைய தினம் என்று மாற்றப்பட்டது’ என்றனர்.

இக்கூட்டத்துக்கு வருகைத் தந்த மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், எஸ்.யோகேஸ்வரன், மாகாணசபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா உள்ளிட்டோரை வழிமறித்து விவசாயிகள் தங்களின் குறைப்பாடுகளைச் சுட்டிக்காட்டினர்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90-4 625-0-560-320-160-600-053-800-668-160-90

 

 

 

SHARE