மட்டக்களப்பு  மர்மமான முறையில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு..!

162

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் கொஸ்த்தாபல் ஒருவர் தான் தங்கியிருந்த அறையில் உயிரிழந்து காணப்பட்டதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த உபுல் ரஞ்சித் கலேகே (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திங்கட்கிழமையன்று பிற்பகலாகியும் குறித்த பொலிஸ் கொஸ்தாபல் கடமைக்கு திரும்பாததன் காரணமாக, அவரது அறைக்கு சென்று திறந்து பார்த்த போது உறங்கியவாறு அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

SHARE