மட்டையால் ஸ்டெம்பை பதம் பார்த்து பரபரப்பை ஏற்படுத்திய இலங்கை வீரர்! பரபரப்பு வீடியோ

192

625.500.560.350.160.300.053.800.748.160.70 (4)

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியாது.

இந்நிலையில் உள்ளுர் ரசிகர்களின் ஆதரவோடு களமிறங்கி விளையாடிய இலங்கை அணி, 3-0 என தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் கொழும்பில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைப்பெற்றது. இதன்போது, இலங்கை அணி சார்பாக தனஞ்சய டி சில்வா களத்தில் விளையாடி கொண்டிருந்தார்.

சில்வா, 29 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அவுஸ்திரேலியா வீரர் வீசிய பந்தை சந்திக்காமல் நேராக விக்கெட் கீப்பரிடம் தவறவிட்டார்.

பின்னர், சில வினாடிகளுக்கு பிறகு மட்டையால் தவறுதலாக ஸ்டம்பை தட்டியதால் மேலிருந்த பேல்ஸ் மைதானத்தில் விழுந்தது. இதைகண்ட அவுஸ்திரேலியா வீரர்கள் கள நடுவரிடம் அவுட் கேட்டனர்.

கள நடுவர், மூன்றாவது நடுவரின் கவனத்திற்கு இதை கொண்டு சென்றனர். வீடியோவை ஆய்வு செய்த மூன்றாவது நடுவர், அவுட் இல்லை என அறிவித்தார்.

மேலும், துடுப்பெடுத்தாடிய சில நொடிகளுக்கு பிறகு துடுப்பாட்ட மட்டை ஸ்டம்பை தாக்கியதால் அவுட் இல்லை என அதற்கான காரணத்தை குறிப்பிட்டார்.

கிரிக்கெட்டில் துடுப்பெடுத்தாடும் போது துடுப்பாட்ட மட்டையால் ஸ்டம்பை தாக்கி பேல்ஸ் மைதானத்தில் விழுந்தால் அவுட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE