ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றிக்கு பிறகு மணிரத்னம் மீண்டும் தன் இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பித்தார். துல்கர், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் என நட்சத்திர பட்டாளங்களுடன் தன் அடுத்த படத்தில் களம் இறங்கினார்.
ஆனால், இதில் துல்கர், கீர்த்தி சுரேஷும் திடிரென்று விலகினர். படம் கைவிடப்பட்டது என்று கூட கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் கைவிடப்படவில்லை, கார்த்தி-நித்யா மேனனும் நடிக்கவுள்ளது உறுதி, பொங்கலுக்கு பிறகு இப்படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகின்றது.