கேகாலை அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இடம்பெயர்ந்த தனது வீட்டாரை காணாது உணவின்றி சேற்று மண்ணில் காத்திருந்த நாய் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் தனது வீட்டாரை காணாது எங்கும் செல்லாது ஒரே இடத்தில் இருப்பதை காணமுடிந்தது.
இறுதியில் தனது வீட்டார் முகாமில் இருப்பதை நாய் கண்டுள்ளது. தற்போது வீட்டாருடன் நாய் மகிழ்ச்சியாக இருப்பதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.