பல கொள்ளைச் சம்பவங்களுக்கு தொடர்புடைய 7 பேர் மதவாச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைக்குண்டுகள், 6 கூர்மையான ஆயுதங்கள், 10 உலோக குழாய்கள், மற்றும் 6 போலி அடையாள அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளது.
பண கொள்ளை, நகை கடத்தல் மற்றும் காசோலைகளில் ஊழல் சம்பவங்கள் பலவற்றில் இவர்கள் தொடர்புபட்டிருப்பதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களை இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களுக்கமைய கொள்ளையடித்த பொருட்கள் மற்றும் பணத்தை எதிர்வரும் நாட்களில் மீட்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.