
உணவை டெலிவரி செய்யும் ஊழியரான பரத் என்பவர் நுங்கம்பாக்கம் ஹாரிங்டன் சாலையோரம் நள்ளிரவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று அவர் மீது திடீரென்று மோதியது. இந்த விபத்தில் அங்கிருந்த கடை ஒன்றும் சேதமடைந்தது. கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
