மத்திய சுகாதார அமைச்சரை சந்தித்தார் வடக்கு மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்….

398

 

24-01-2015 சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் கொழும்பில் மத்திய சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கௌரவ டாக்டர் ராஜித சேனரத்ன அவர்களை அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில்  சந்தித்தார் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்.
unnamed (5) unnamed (6) unnamed (7)
நேற்றயதினம் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது வட மாகாணத்தில் நிலவுகின்ற சுகாதாரம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து, வட மாகாண சுகாதாரத் துறையினையும் சுதேச வைதியத்துறையையும் துரிதமாக அபிவிருத்தி செய்யுமாறும் நிலவுகின்ற வைத்தியர் மற்றும் தாதிமார் பற்றாக்குறையினையும் நிவர்த்திசெயுமாறும், வட மாகாணத்தின் கிராமப்புறங்களில் காணப்படுகின்ற வைத்தியசாலைகளில் வைத்தியர் மற்றும் தாதிமார் பற்றாக்குறையினால் கிராம மக்கள் பல அசௌகரியங்களை சந்திப்பதாகவும் எனவே இவ்வாறான பிரச்சினைகளை வட மாகாணத்தில் நிவர்த்தி செய்யுமாறும் கேட்டுக்கொண்டதாகவும், மற்றும் சுகாதார அமைச்சர் அவர்களை வட மாகாணத்துக்கு விஜயம் செய்து நேரடியாக வைத்தியசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார், அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கௌரவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் எதிர்காலத்தில் தான் அங்கு வருவதற்கான ஏற்ப்பாடுகளை செய்யுமாறும் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் வட மாகாண மீன்பிடி அமைச்சரின் ஆளுகைக்குட்பட்ட விடயங்கள் தொடர்பான மத்திய அமைச்சர்களை சந்திப்பதற்கான ஏற்ப்பாடுகளை வருகின்ற மாதங்களில் செய்து தருவதாகவும் அவர் உறுதிமொழி கூறியதாகவும் அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்தார்.
மேலும் மத்திய சுகாதார அமைச்சர் அவர்களுக்கும் வட மாகாண மீன்பிடி அமைச்சர் அவர்களுக்கும் நீண்டகால குடும்ப ரீதியான நட்பு இருந்துவருவதும் குறிப்பிடத்தக்கது…
SHARE