மனதை உருக்குலைய செய்யும் குழந்தைகளின் புகைப்படங்கள்!

183

ஏமன் நாட்டில் நடந்து வரும் போர் சூழலால் சரியான உணவு கிடைக்காததால் பல குழந்தைகள் Chronic Malnutrition என்னும் ஊட்டசத்து குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏமன் நாட்டில் போர் உச்சத்தில் இருப்பதால் கப்பலில் வர வேண்டிய உணவுகள் சரியாக வருவதில்லை.

இதனால் அந்த நாட்டில் 28 மில்லியன் மக்கள் சரியான உணவுகள் இன்றி உடல் நலிவுற்று வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் சரியாக சாப்பிடாமல் Chronic Malnutrition என்னும் ஊட்டச்சத்து குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டு எலும்பும் தோலுமாக பரிதாபமாக காட்சியளிகின்றனர்.

அங்குள்ள மருத்துவமனையில் நோயாளிகளாக பல குழந்தைகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒரு குழந்தையின் தாய் கூறும்போது, என் ஆறு வயது மகனான சலீம் உடல் நிலை சரியில்லாமல் எலும்பும் தோலுமாக இருக்கிறான். பிஸ்கெட் முதற்கொண்டு எது கொடுத்தாலும் சாப்பிட மறுக்கிறான் என சோகத்துடன் அவர் கூறியுள்ளார்.

அந்த மருத்துவமனையில் எங்கு பார்த்தாலும் குழந்தைகளின் உடலில் குளுகோஸ் ஏறும் காட்சியே கண்ணில் தென்படுகிறது. போரால் வறுமை,பட்டினி அங்கு நிலவும் சூழலில் புதிதாக நியமிக்கப்பட்ட வங்கி ஆளுநர் Mohamed Bin Humam, வங்கியில் போதுமான பணம் இல்லை, அதனால் மக்களுக்கு உதவ இயலாது என கூறிவிட்டார்.

இதன் காரணமாக ஏமன் மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

SHARE