மாத்தறை – கம்புருபிடிய – இஹலவிடியல பிரதேசத்தில் 54 வயதுடைய தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபர் ஒருவர் தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட கணவருக்கு 59 வயதாகும்.
இந்த கொலை சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக கம்புருபிடிய காவற்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.