கோல்ப் பந்தயத்தில் எனது மனைவியை தோற்கடிக்க வேண்டும் என்று டென்னிஸ் வீரர் கெவின் ஆண்டர்சன் கூறியுள்ளார்.தென் ஆப்பிரிக்க வீரரான கெவின் உலக தரவரிசையில் 12வது இடத்தில் இருக்கிறார், இவர் முதல் முறையாக சென்னை ஓபன் டென்னிஸில் விளையாடவிருக்கிறார்.![]() இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் ஏற்கனவே 2014-ம் ஆண்டு இந்தியாவில் விளையாடி இருக்கிறேன். அப்போது எனது மனைவியுடன் முதல்முறையாக வந்திருந்தேன். இந்திய மக்கள் மிகவும் நேசிக்கக்கூடியவர்கள். டென்னிஸ் ரசிகர்களும் அப்படி தான். இங்குள்ள உணவு வகைகள் ருசியாக இருந்தன. ஆனால் இந்தியாவில் ஏ.டி.பி, தொடரில் விளையாட இருப்பது இதுவே முதல் முறையாகும். சென்னை ஓபனில் களம் இறங்குவதற்கு உண்மையிலேயே மிகவும் ஆர்வமுடனும், உத்வேகத்துடனும் எதிர்நோக்கி இருக்கிறேன். எனது விளையாட்டு பயணத்தில், எதிராளிகளின் ஆட்ட அணுகுமுறையை அலசி ஆராயாமல், யுக்தியை களத்தில் சிறப்பாக கையாளுவேன் என்று கூறியுள்ளார். இற்கிடையில் தனது மனைவியுடன் கோல்ப் விளையாடுவது குறித்து கூறிய அவர், எனது மனைவி கோல்ப் விளையாட்டில் சிறந்தவர், எனக்கு அதிகம் டிப்ஸ் தருவார், அவருடன் நான் விளையாடும்போதெல்லாம் என்னை அவர் தோற்கடித்துவிடுவார், ஒருமுறை கூட நான் வெற்றி பெற்றது கிடையாது. என்றவாது ஒருநான் அவரை தோற்கடிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
|