மனைவி வந்த பிறகு வாழ்க்கையே லேசாக மாறிவிட்டது – திமுத் கருணாரத்னே

603
இலங்கை அணியின் தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பாக மனம் திறந்து பேசியுள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணியில் சிறந்த பங்காற்றி வரும் கருணாரத்னே, ஆரம்ப காலத்தில் ஜெயவர்த்தனே உட்பட பல சீனியர் வீரர்கள் தனக்கு உறுதுணையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், சிட்னியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 85 ஓட்டங்கள் எடுத்தது எனது சிறந்த இன்னிங்ஸ், அதை மறக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுத், நடிகையும் மொடல் அழகியுமான அனுராதா குருகுலசூரியா என்பவரை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இவரது திருமணத்திற்கு வந்திருந்தார்.

அவரது மனைவி பற்றி திமுத் கூறுகையில், ”நான் ஒரு நடிகையை திருமணம் செய்திருப்பதால் அனைவரும் இது காதல் திருமணமா என்று கேட்பர். ஆனால் இது எனது குடும்பத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்.

எனது மனைவி அனைத்து வகையிலும் எனக்கு உதவிகரமாக இருக்கிறார். அவர் வந்த பிறகு வாழ்க்கை மிகவும் லேசாக மாறிவிட்டது. நான் கிரிக்கெட் மட்டும் விளையாட வேண்டும் என்பது அவர் விருப்பம்.

அவர் எனது வாழ்க்கையில் கிடைத்தது எனது அதிர்ஷ்டம். கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் கூட அவரை அழைத்துச் செல்லவே விரும்புவேன். இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

SHARE