மன்னார் ஆயரை வட மாகாண முதல்வர் சந்தித்தார்

210
வட மாகாண முதலமைச்சர் மன்னார் மறைமாவட்ட ஆயரை இன்று மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்து ஆயரது உடல் நிலை தொடர்பாக கேட்டறிந்தார்.

இன்று வட மாகாண முதல்வர் மன்னார் எருக்கலம்பிட்டி பாடசாலையில் தொழிநுட்ப பீடத்தை திறந்து வைத்த பின் ஆயர் இல்லம் சென்ற வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆயரை சந்தித்து சுகம் விசாரித்தார்.

இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் ஆயர் மிக விரைவில் குணமடைவார்.

அதன் பின் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முன்வருவார், இதற்கு இறைவன் அருள் புரிவார் என்கின்ற நம்பிக்கை எனக்குண்டு என்றார்.

SHARE