மன்னார், பனங்கட்டிக்கோடு கிராமத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த மோதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கால்பந்தாட்ட போட்டி ஒன்றின் போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியதை அடுத்து தாக்குதலுக்கு ஒள்ளான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக குறித்த கிராமத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையில் மோதல்கள் நடைபெற்று வந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார், குறித்த கிராமத்தில் அமைதியை நிலை நாட்டும் பொருட்டு ஊர் மக்கள், சமயத் தலைவர்கள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் செய்த முறைப்பாட்டை அடுத்து தாக்குதலுடன் தொடர்புடையவர்களளை மாத்திரம் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரியவருகிறது.
எனினும் இரண்டு தரப்பினரும் மாறிமாறி செய்த முறைப்பாடுகளுக்கு அமைய நேற்று மாலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேநகத்தில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 25 பேரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார், சந்தேகநபர்களை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.