மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக திருகோணமலை மறைமாவட்டத்தின் இளைப்பாறிய ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை

267

 

மன்னார் மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்!
mannaar

மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்கூரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் பதவி துறப்பை திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில்….

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக திருகோணமலை மறைமாவட்டத்தின் இளைப்பாறிய ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகர் நியமனம் தொடர்பாக இன்று மாலை 4.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை மேலும் தெரிவிக்கையில்,,,

திருச்சபைச் சட்ட எண 401 பகுதி 1ற்கு அமைவாக மன்னார் ஆயர் அதி வந்தனைக்கூரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் பதவி துறப்பை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதனை இலங்கை;கான அப்போஸ்தலிக்க தூதுவர் அறிவித்துள்ளார்.

அந்த வகையில் மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமிக்கப்பட்டு பொறுப்பை ஏற்கும் வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருகோணமலை மறைமாவட்டத்தின் இளைப்பாறிய ஆயர் அதிவந்தனைக்குரிய குரிய ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை அவர்களை மன்னார் மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராக நியமித்துள்ளார்.

இந்த நியமனம் இன்று  மாலை 4.30 மணியில் இருந்து அமுலுக்கு வரும் எனவும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது மன்னார் மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகரின் செயலாளர் அருட்தந்தை முரளிதரன், மறைமாவட்ட நிதி பொருப்பாளர் அருட்தந்தை இராஜநாயகம்,மறைமாவட்டத்தின் ஊடக இணைப்பாளர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE