மன்/ குஞ்சுக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புகளுக்கான ஆசிரியரை ஒழுங்குபடுத்தும் நிகழ்ச்சியும், அம்மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு.ஜெயசீலன் தலைமையில் 12.05.2015 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், பெரியகுஞ்சுக்குளம் பங்குத்தந்தை அருட்திரு அன்டனி சோசை, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
ஆசிரியருக்கான மாதாந்த கொடுப்பணவை அரும்புகள் அமைப்பினர் வழங்க உள்ளதோடு, மாணவர்களின் கற்றல் உபகரணங்களுக்கும் நிதியுதவி அளித்திருந்தனர்.
இப்பாடசாலை ஆண்-பெண் ஆசிரியர்களுக்கான தங்கும் விடுதி உள்ளிட்ட பலதரப்பட்ட பௌதீக வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கி வருவதால், ஆசிரியர்களுக்கான விடுதியை அமைத்து தருமாறும், பாடசாலைக்கான பிரதான முகப்பு நுழைவாயிலை அமைத்துத்தருமாறும் பாடசாலை சமுகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.