மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு உலக நாடுகளிடம் பாப்பரசர் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைதியாக செவிமடுத்துள்ளார்.
இதுகுறித்த தகவலை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வின் ஆரம்ப உரை பாப்பரசர் புனித பிரான்சிஸ் இனால் நிகழ்த்தப்பட்டது. இதன்போது மரண தண்டனையை ரத்துச் செய்ய உலக நாடுகள் முன்வர வேண்டும்என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த உரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் அமைதியாக, ஆழ்ந்து செவிமடுத்துக் கொண்டிருந்ததாக அவரது ஊடகப் பிரிவு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து எதுவித பிரதிபலிப்பையும் காணமுடியவில்லை என்றும் அவரது ஊடகப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.