மரண வீட்டில் அரசியல் பேசுவது தவறு. மரணமடைந்தவரை கௌரவப்படுத்துவதற்காக வந்த என்னிடம் அரசியல் ரீதியில் வினாத் தொடுப்பது தவறானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற காணி அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தனவுக்கு இறுதி மரியாதை செலுத்தும் முகமாக வருவை தந்தபோது, உங்களை விட்டு விலகிச் சென்ற காலஞ்சென்ற அமைச்சருக்கு நீங்கள் மன்னிப்பு வழங்குவீரா? என ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கே அவர் கடுமையான தொனியில் இவ்வாறு கூறியுள்ளார்.