மரத்திலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு – தம்புள்ளையில் சம்பவம்

197

தம்புள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ள பிரதேச பகுதியில் 20.01.2016 அன்று மாலை மரத்திலிருந்து தவறி விழுந்து அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ள பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் எஸ்.எம். கீர்த்திரத்ன 44 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் 40 அடி உயரமான மரம் ஒன்றில் கிளை ஒன்றை வெட்டிக்கொண்டிருக்கும் பொழுது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தம்புள்ள பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

d7e8b254-834d-43fb-bb95-9fcb67e5c74f

f544e3f9-1b5c-4e9a-8945-74d417918eeb

SHARE