மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல், கதறி அழுத பிரேமலதா

75

 

கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் நுரையீரல் பாதிக்கப்பட்டதன் காரணமாக மரணமடைந்துள்ளார்.

இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மருத்துவமனையில் மரணமடைந்த நடிகர் விஜயகாந்தின் உடல் தற்போது அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல்
விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு வந்த விஜயகாந்தின் உடலை பார்த்த அவருடைய ரசிகர்களும், தொண்டர்களும் கதறி அழுதனர்.

மேலும் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் கண்ணீர் விட்டு அழுதுகொண்டே வந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

SHARE